காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் பூபதி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளுக்கான பொதுக்கூட்டம் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எம்.ஏ. பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ‘தமிழ் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வழி செய்தவர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர். ஆனால் செம்மொழி மாநாடு நடத்தி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வீண் செய்தவர்கள் திமுகவினர். மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அதிமுகவிற்குதான் தகுதி உண்டு’ என்றார்.