சென்னை:இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2022-2023ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களை சேர்க்கலாம். இதற்காக பள்ளியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும். எல்கேஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது ஒரு கிலோ மீட்டர் ஆகும். மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.