உலக எய்ட்ஸ் தினம்:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான், இந்த தினத்தின் நோக்கமாகும். எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கியக் குறிக்கோளாகும்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்குப்பதிவு:-
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
இன்று புயலாகிறது புரெவி:-
வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகி, பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது இன்று காலை புயலாக வலுப்பெறுகிறது. 'புரெவி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையைக் கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும். இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.