ராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த்(74). இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களுக்கு சீத்தல்(38) என்ற மகனும், பிங்கி என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தலில்சந்த சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மகள் பிங்கி, அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், தலில்சந்த், புஷ்பா, சீத்தல் ஆகியோரை நேற்று (நவம்பர் 11) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தறுக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்தனர். இதனிடையே, சம்பத்தன்று பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பிங்கியின் கணவர் தெரிவித்துள்ளார்.