தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 5, 2022, 10:57 PM IST

ETV Bharat / city

சென்னையில் தற்கொலை செய்த மகன்... பிரிவைத் தாங்காத தாயும் தற்கொலை செய்த சோகம்

சென்னையில் தற்கொலை செய்துகொண்ட மகனின் பிரிவைத்தாங்க முடியாத தாயாரும், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னைவியாசர்பாடி, கரிமேடு பகுதியைச்சேர்ந்த ரகுநாதன்-இளவரசி தம்பதியினரின் மகன் பி.காம் பட்டதாரியான சுசில்(21). இவர் நடனப்பள்ளியில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு இரவில் தாமதமாக வருவதை, இவரது தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று (செப்.5) வீட்டில் யாரும் இல்லாதநிலையில் சுசில் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, மகனைப் பிரிந்த துக்கம் தாளாத நிலையில், அவரது தாயாரும் தனது மகனைப்போல தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தற்கொலையைக் கைவிடுக

மேலும் இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த சோகத்தில் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கைதி தற்கொலை; அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details