தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை: மவுனம் காக்கும் அரசிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்! - Stalin About GST compensation

சென்னை: மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mk-stalin-on-gst
mk-stalin-on-gst

By

Published : Dec 7, 2019, 12:45 PM IST

ஜிஎஸ்டி வரி சட்டம் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு சரிகட்டும் என மத்திய அரசு கூறியது. ஆனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாத காரணத்தால் வழங்க முடியாது என மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ரூ. 9,270 கோடி இழப்பீடு குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி இழப்பீடு சுமார் ரூ. 5,909 கோடிக்கும் மேல் நிலுவலையில் உள்ளது.

ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?, அதில் மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளோம்?, நிலுவலையில் உள்ள தொகை எவ்வளவு? என்ற கேள்விகள் குறித்து அதிமுக அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது.

அதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மையால் தமிழ்நாடு நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டையும் சுமையாக ஏற்றி வைத்துள்ளது. எனவே ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசிடமிருந்து உடனடியாக நிலுவைத் தொகையைப் பெறவேண்டும்.

மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பாஜக அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழ்நாட்டின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி.!

ABOUT THE AUTHOR

...view details