தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நேதாஜியின் ஐஎன்ஏ பிரிவில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல் - நேதாஜியின் ஐஎன்ஏ பிரிவில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப் பிரிவில் பணியாற்றிய அஞ்சலை பொன்னுசாமி மறைந்தார். அவரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல்
இரங்கல்

By

Published : Jun 2, 2022, 2:00 PM IST

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப் பிரிவில் பணியாற்றிய அஞ்சலை பொன்னுசாமி இன்று (ஜூன் 2) இயற்கை எய்தினார்.

இந்நிலையில், அஞ்சலை பொன்னுசாமியின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army - INA) இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வீரம், மன உறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண் குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப் புகழ் பெறும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீன்களை வெட்டிக் கழுவும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய வீரத்தாய் - சிறப்புத் தொகுப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details