யோகா குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானாம்மாள் நேற்று மதியம் காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.
இவர் சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் போன்ற 50 கடினமான ஆசனங்களையும் அசாதாரணமாக செய்து அசத்தக் கூடிய திறமை படைத்தவர்.
இதுவரை நானாம்மாள் தான் கற்ற கலையைப் பல லட்சம் பேருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இவரிடம் யோகா பயின்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.