சென்னை: குரோம்பேட்டையில் எம்ஐடி கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. அங்குள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 1,747 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மருத்துவ குழுவினால் கண்காணித்து வருகின்றனர். மேலும் 330 மாணவர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்ட 80 மாணவர்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.