தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கபாலீஸ்வரர் கோயிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு - கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்

கபாலீஸ்வரர் கோயிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

By

Published : Jul 26, 2022, 5:35 PM IST

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நல்ல முயற்சிகள் எடுக்கக்கூடிய பணிகள் நடந்தேறுவதை புதிதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அரசு செய்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில் கோயில்களில் முடிந்த அளவிற்கு கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கோயிலினுடைய தூய்மை, வருகின்ற பக்தர்களிடம் சிறந்த முறையில் அன்பாக பேசுகின்ற வகையில் பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்து சமய அறநிலையத்துறையில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பணிகள் சிறப்போடு நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு முயற்சியாக மயிலாப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், துறையின் முதன்மை செயலாளர், கோயில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கின்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கின்ற மல்லிகார்ஜுனன் சந்தானகிருஷ்ணன் சீரிய முயற்சியால் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் காற்றிலிருந்து ஈரப்பதத்தை பெற்று அதை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு இயந்திரத்தை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம்.

ஒரு நாளைக்கு 500 லிட்டர் தண்ணீர் இதன் மூலம் உற்பத்தியாகின்றது. உடலுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தருகின்றதாகவும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் பெறப்படுவதால் பக்தர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். அடுத்ததாக காளிகாம்பாள் கோயிலிலே இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை அர்ப்பணிப்பதாக மல்லிகார்ஜுனன் தெரிவித்திருக்கின்றார். இந்த இயந்திரம் தொடர்ந்து நல்ல பயனை தருமானால் முதுநிலை கோயில்கள் அனைத்திலும் இதுபோன்ற இயந்திரத்தை நிறுவ இந்து சமய அறநிலைத்துறை முயற்சி எடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நகைகளை சரி பார்ப்பதற்கு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தேதியை தருவதாக கூறி இருக்கின்றார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற வார்த்தைக்கு இணங்க பொறுமையாக ஒவ்வொரு அடியாக கோயில் விவகாரங்களில் எடுத்து வைத்திருக்கின்றோம். ஆகவே அவர்கள் கேட்ட நேரத்தை தருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முன் வந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றதோ அதனை பொறுத்து இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details