தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவின் ஊதாரித்தனம் - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்! - திமுகவின் ஊதாரித்தனம்

சென்னை: திமுக ஆட்சியில் ஊதாரித்தனமாக செய்த செலவுகளால் தமிழ்நாடு அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Feb 24, 2020, 1:41 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசுப்பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசு திறமையாக செயல்பட்டு வருவதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவதூறு பேசி வருவதாக விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் ஊதாரித்தனமாக செய்த செலவுகளால்தான், அரசிற்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு ஊதாரித்தனமான செலவுகளுக்காக, அதிமுக அரசு தற்போது வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

திமுகவின் ஊதாரித்தனம் - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்!

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் நிதிநிலை கோமாவில் உள்ளது - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details