சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் தொழிலாளர் நல ஆணையம் இயங்கிவருகிறது.
கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் சி.வி கணேசன்! - சென்னை அப்டேட் செய்திகள்
தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் பணியின்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி. கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

பணிநியமனம்
இந்த ஆணையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, பணியின் போது மரணமடைந்த 8 ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று (ஜன.20) வழங்கினார்.
அப்போது தொழிலாளர் நலன் மாற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர். கிர்லோஷ்குமார்
தொழிலாளர் ஆணையர் டாக்டர். அதுல் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: TN urban local body polls 2022: புதுக்கோட்டை நகராட்சித் தலைவிக்கு காத்திருக்கும் சவால்கள்!