சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த கப்பலில் பொறியாளராக பணியாற்றிய இந்தோனேசியாவைச் சேர்ந்த முகமதுஸெனல் அரிஃபின் என்பவர், கப்பல் பணியாளரால் கடந்த 2021 செப்டம்பரில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தார்.
இந்நிலையில் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ள எண்ணூரில் மருத்துவமனை வசதி இல்லாததால், முன் அனுமதியில்லாமல் வெளிநாட்டவர் சட்டத்துக்கு விரோதமாக, கப்பலை விட்டு வெளியேறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அரிஃபின்.
சிகிச்சைக்குப் பின் கப்பலுக்கு திரும்ப முயற்சித்த அவரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்து, பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்கள் முகாமில் அடைத்தனர்.