சென்னை: மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிகாட்டி காட்பாடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் வி. ராமு தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று (டிச.3) விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, "முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை. அதில், எந்தவிதமான உண்மைகளும் இல்லை. அனைத்து குற்றச்சாட்டிற்கும் எந்தவித ஆதாரங்களும் இல்லை. அனைத்தும் பொதுவானவை.