தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டாக்டர் சுப்பையாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது! - பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Mar 21, 2022, 4:07 PM IST

சென்னை:கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், மருத்துவர் சுப்பையா சென்னை நங்கநல்லூர் அருகில் உள்ள வீட்டில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அரும்பாக்கம் காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இவர் மீது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவசர விசாரணை

மேற்கூறிய வழக்குகளில் ஜாமீன்கோரி மருத்துவர் சுப்பையா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்டப் பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்குப் பதிய என்ன காரணம்' என நீதிபதி கேள்வி எழுப்பினார்? மேலும், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு’ வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? - எல்லாம் சசிகலாவிற்கு தெரியும் - இளவரசி

ABOUT THE AUTHOR

...view details