தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் மருந்து உற்பத்தி பூங்கா அமைகிறது - சென்னை அண்மை செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருந்து உற்பத்தி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவது தெரிய வந்துள்ளது.

பிரதமர்   முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
பிரதமர் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

By

Published : Jan 19, 2021, 9:19 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மருந்து உற்பத்தி பூங்கா

அதில், திருவள்ளூர் மாவட்டம் குமுடிப்பூண்டி தாலுக்கா அருகேயுள்ள மணலூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 2 ஆயிரத்து 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரகடம் அருகே 350 ஏக்கர் பரப்பளவில், 430 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரங்கள் உற்பத்தி செய்யும் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், பொதுவான உற்பத்தி, சேமிப்பு, குளிர்பதன கிடங்கு, சோதனை மற்றும் ஆராய்ச்சி வசதிகள் இருக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு ஆட்டோமொபைல், மின்னணு சாதனம், பின்னலாடை உள்ளிட்ட துறைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும் மருந்து உற்பத்தியில் இன்னும் முழு அளவை எட்டவில்லை என்பதால் தற்போது இந்த பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பூங்காக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து முறையே 1,100 கோடி ரூபாய் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

பின்னலாடை பூங்கா

உலக சந்தையுடன் போட்டியிடும் வகையில் மத்திய அரசு மெகா பின்னலாடை பூங்காக்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. பின்னலாடை துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதால், மத்திய அரசு இங்கு குறைந்தபட்சம் 2 பின்னலாடை பூங்காக்களை அமைக்க வேண்டும் என்றும், இதற்காக, ஆயிரம் ஏக்கர் நிலம், 24 மணி நேர மின்சாரம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதியுடன் மாநில அரசு 3 இடங்களை தயார் செய்து வைத்துள்ளது.

இங்கு அமையும் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல், சென்னை- ஓசூர் இடையேயான பாதுகாப்பு தொழில் வழித்தடம் கடந்த 2019- ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை-சேலம் இரவு நேர விமானம்! - பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details