முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது படத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.