தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2019, 10:00 PM IST

ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

சென்னை: வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்ற மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கைவிடுத்துள்ளார்.

protest
protest

சென்னையை அடுத்த தாம்பரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துவிட்டனர். மேற்கு வங்க, கேரள முதல்வர்களும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தங்கள் மாநிலத்தில் நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசும் வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த மாட்டோம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டார்.

குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியேந்தி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details