தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு - man died who set fire himself against chennai RA puram Encroachment demolition

ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்ஏ புரம்) வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (மே 8) தீக்குளித்த கண்ணையன், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 9) உயிரிழந்தார்.

ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு, man died who set fire himself against chennai RA puram Encroachment demolition
ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு

By

Published : May 9, 2022, 8:46 AM IST

Updated : May 9, 2022, 10:03 AM IST

சென்னை:ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனைக் கடந்த ஒரு வார காலமாக அகற்றும் பணியில் காவல் துறையினர் உதவியோடு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று (மே 8) அலுவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணையன் (55) என்பவர், அவரின் வீட்டை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த கண்ணையா (வட்டமிடப்பட்டவர்)

இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினர், அரசு அலுவலர்களின் வாகனங்கள் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணையனுக்கு 90 சதவீதத்திற்கும் மேல் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்ஏ புரத்தில் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 9) உயிரிழந்தார். கண்ணையன் பாட்டளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராவார்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?

Last Updated : May 9, 2022, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details