யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டு விட்டதாகவும், கட்டிட இடிபாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழ்நாடு முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, கட்டிட இடிபாடுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து பேசி உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.