சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாட்டில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மத்திய அரசு, கனரக சரக்கு வாகனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து, சட்டம் இயற்றி உள்ளது. இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை தமிழ்நாடு அரசோ, வாகனங்களை பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களோ பின்பற்றவில்லை, எனவே மத்திய அரசின் சட்டத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 2) தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.