தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2021, 7:38 PM IST

Updated : May 14, 2021, 9:02 PM IST

ETV Bharat / city

தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

19:32 May 14

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

இ பாஸ் கட்டாயம்

திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு வரும் 17ம் தேதி முதல் கட்டாயம்.

  • இ-பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும் 

அனுமதி

  • வீட்டில் இருந்து அருகே உள்ள கடைகளுக்கு செல்ல மட்டுமே அனுமதி.
  • ஏற்கனவே அறிவித்துள்ளபடி  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி
  • இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க காலை 6 முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி

அனுமதி இல்லை

  • நாளை முதல்  டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை
  • காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை
Last Updated : May 14, 2021, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details