தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தல் கடிதம் - கிராம சபைக் கூட்டம்

சென்னை: கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தி தலைமை செயலருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தல் கடிதம்
கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தல் கடிதம்

By

Published : Oct 13, 2020, 11:18 AM IST

தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் இணைந்து `கிராம சபை மீட்பு வாரம்' என்பதை நடத்திவருகின்றன. இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தி தலைமை செயலளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், ”தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி 26ஆம் தேதிக்கு பிறகு மே 1, ஆகஸ்ட் 15 தேதிகளில் நடக்கவிருந்த இரு கிராமசபைக் கூட்டங்கள், கரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டன. சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கிராம சபைக்கான அறிவிப்பு 26.09.2020 அன்று வெளியிடப்பட்டு, பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

கரோனா சூழலிலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டமும் நடந்துள்ளன. கரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவிற்கு நாடாளுமன்றக் கூட்டமும், சட்டப்பேரவைக் கூட்டமும் மிக அவசியமோ, அதே அளவிற்கு, கிராம சபையைக் கூட்டுவதும் அவசியமே.

மக்கள் சுய நிதானம் இழந்து, தகுந்த இடைவெளியை சற்றும் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ள டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும்போது, ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கிற, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் “சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யக்கூடியக் களமாக இருக்கக்கூடிய, கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான சில முக்கிய விஷயங்களையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

“ 1) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2) இன் படி, அரசின் பொதுவான ஆணைகளுக்கு உட்பட்டு, கிராமசபைக் கூட்டம் ஓர் ஆண்டில் குறைந்தது இரண்டு முறையாவது கூட வேண்டும். மேலும், இரண்டு கூட்டங்களுக்கு இடையே ஆறு மாத கால இடைவெளி இருக்கக் கூடாது.

2) மத்திய ஊரக வளர்ச்சித் துறை, 24.09.2020 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில கூடுதல் தலைமை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வருகின்ற 2021-22 நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கான முடிவுகளை எடுக்கவும், அக்டோபர் 02 கிராமசபையையும், அக்டோபர் 03 முதல் நவம்பர் 30க்குள் ஒரு சிறப்புக் கிராமசபையினையும் கட்டாயம் கூட்ட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

3) 14 வது மத்திய மான்ய நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்(VPDP) தயாரிப்பது அவசியம். 2021-22 நிதியாண்டுக்கான VPDP தயாரிப்பதற்கு, மக்கள் திட்டமிடல் இயக்கத்தை மாநில அரசுகள் 02.10.2020 முதல் 31.01.2021 வரை பல்வேறு படிநிலைகளில் நடத்த வேண்டும். இதற்கும் கிராமசபையைக் கூட்டுவது அவசியம்.

எனவே, போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்து, உடனடியாக கிராமசபைக் கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க நடத்திட தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details