தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2020, 2:48 PM IST

ETV Bharat / city

கூடங்குளத்தில் காயமடைந்த 2 காவலர்கள்: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

kudankulam
kudankulam

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன், படிப்படியாக அனுப்பிவைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இதுவரை, சுமார் 13 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மே 9ஆம் தேதியன்று அணுமின் நிலைய வாயில் அருகில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அவர்களிடம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி கலைந்துசெல்ல காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் சில தொழிலாளர்கள் கலைந்துசெல்ல மறுத்து, காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா, வாகன ஓட்டுநர் காவலர் சக்திவேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்நிகழ்வில் பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவிற்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details