நான்கு மணி நேர வாய்ப்பு கூட வழங்காமல் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அறிவித்ததன் விளைவாக பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் தீர்ந்தபாடு இல்லை எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் ஏற்பாடு செய்ததை போல சிறப்பு ரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடு முழுவதும் சுற்றுலாத்துறை முடக்கத்தால் 4 முதல் 5 கோடி பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால், 1.5 கோடி தொழிலாளர்கள் வேலையற்று இருக்கின்றனர். இதுபோல் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.