தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு எஸ்டேட் வழக்கு: சயான், மனோஜ் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு காவலாளியைக் கொலை செய்து, கொள்ளையடித்ததாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் துறையினர், அவர்களைக் கைதுசெய்தனர். பின்னர் வெளியில் இருந்த அவர்களின் பிணை ரத்துசெய்யப்பட்டதால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

By

Published : Jul 16, 2020, 5:39 PM IST

Published : Jul 16, 2020, 5:39 PM IST

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு

சென்னை:கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் பிணை மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு காவலாளியைக் கொலை செய்து, கொள்ளையடித்ததாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.

பின், இவர்களை பிணையில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பிணை வழங்க வேண்டுமென, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில் வழக்கு இன்று(ஜூலை 16) மீண்டும் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

காவல் துறையின் பதில் மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details