முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், 2015ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தனக்குச் சொந்தமான சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனைசெய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த 7.37 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமானவரித் துறை 2018இல் வழக்கு தொடர்ந்தது.
சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல்செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. இதை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.