கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ள ஏழை எளிய மக்கள் தொழில் தொடங்கிட கடன் உதவிகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்கு சிறு தொழில் கடன், மகளிர் குழு கடன் உள்ளிட்ட கடன் உதவிகள் வழங்கும் விழா மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவு வங்கியில் தொழில் தொடங்க கடன் உதவி - kanchipuram latest news
காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள 160 பேருக்கு தொழில் தொடங்கிட, ரூபாய் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் கடனுதவியை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.
![கூட்டுறவு வங்கியில் தொழில் தொடங்க கடன் உதவி காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள 160 பேருக்கு தொழில் தொடங்கிட, ருபாய் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் கடனுதவியை, அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5924828-thumbnail-3x2-.jpg)
காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள 160 பேருக்கு தொழில் தொடங்கிட, ருபாய் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் கடனுதவியை, அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.
கூட்டுறவு வங்கியில் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
இவ்விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு வங்கியின் வாடிக்கையாளர்கள் 160 பேருக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் ருபாய் மதிப்பில் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க:ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் பரிதாபம்!