தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சர்வதேச அரசியல் பேசும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' - நடிகர் தினேஷ் பெருமிதம்! - இடக்குநர் அதியன் ஆதிரை

சென்னை: "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் என்னுடைய சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான, பெருமைக்குரிய படமாக இருக்கும். சர்வதேச அரசியல் இப்படத்தில் உள்ளது." என்று, நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தினேஷ்

By

Published : May 3, 2019, 4:13 AM IST

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தினேஷ். அப்படத்தில் எத்தனை முறை காதல் தோல்வி ஏற்பட்டாலும் அலட்டிக்காத கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணனின் கானா பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன.

இதையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் தினேஷ். ராஜூமுருகனின் 'குக்கூ', வெற்றிமாறனின் 'விசாரணை' ஆகிய படங்களில் கதையின் தேவைக்கேற்ப உடலை வருத்தியும், இயல்பான நடிப்பையும் கொடுத்திருந்தார். தற்போது சினிமாவில் இயக்குநர்களின் நடிகராகவும் வலம் வருகிறார் தினேஷ். தற்போது பரியேறும் பெருமாள் படத்திற்கு பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இரண்டாம் உலகப்போரி ன் கடைசி குண்டு படத்தில் நடிகர் தினேஷ்

இந்த படம் குறித்து நடிகர் தினேஷ் கூறுகையில், "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் பொருந்திப்போகும். இந்த படத்தில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அதேசமயம் அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் வந்துள்ளது. ஒரு லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம். என் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்ப முக்கியமான, பெருமைக்குரிய படமாக இருக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details