தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈ.வி.கே.எஸ். மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை - இளங்கோவன் மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக, ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈ.வி.கே.எஸ். மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை
ஈ.வி.கே.எஸ். மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை

By

Published : Mar 16, 2021, 11:00 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரையும், அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாடு ஆளுநரையும் விமர்சித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள், அரசு ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு, கூடங்குளம் போராட்டம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி ஜெயலலிதா சார்பில் இளங்கோவனுக்கு எதிராக மூன்று அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த மூன்று அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்துடன், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details