தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.4 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டடங்கள் திறப்பு! - 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பதிவுத்துறை அலுவலக வளாகம்

சென்னை: நொளம்பூரில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.

4 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டடங்கள் திறப்பு
4 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டடங்கள் திறப்பு

By

Published : Feb 13, 2021, 10:36 PM IST

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

4 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டடங்கள் திறப்பு

அந்த வகையில், மத்திய சென்னை பதிவு மாவட்டம், நொளம்பூரில் 6,326.88 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இப்புதிய அலுவலக வளாகக் கட்டடத்தில் , அண்ணா நகர், அசோக் நகர், வில்லிவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். இக்கட்டடம் வாகன நிறுத்துமிடம் , மின்னணு முத்திரைத்தாள் அலுவலகம், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை , மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி மற்றும் மங்கலம் ஆகிய இடங்களில் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் 90 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் , தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பதிவுத்துறைத் தலைவர் முனைவர் பொ. சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகையை உயர்த்த எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details