சென்னை:மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் "சீர்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்