சென்னை ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் துறை அகாதமி செயல்பட்டுவருகிறது. 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அகாதமியில் நேரடியாகக் காவல் உதவி ஆய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெறுபவர்கள், குரூப்-1 தேர்வுமூலம் காவல் துணை கண்காணிப்பாளர்களாகத் தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் ஐபிஎஸ் தேர்வு முடிந்து வருபவர்களுக்கும், சுங்கத் துறை-அமலாக்கப்பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை கூடுதல் டிஜிபி அந்தஸ்து அலுவலரின் தலைமையில், காவல் பயிற்சிக் கல்லூரி டிஜிபிக்கு கீழ் தமிழ்நாடு காவல் துறை அகாதமி செயல்பட்டுவந்தது.