சென்னை: இந்திய மருத்துவச் சங்கம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "முதுகலை நீட் நுழைவுத் தேர்வு கடந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் நீட் முதுகலைத் தேர்வு நடைபெற்றது.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட வேண்டிய முதுகலை கலந்தாய்வு, மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஜனவரி மாதம் தான் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் 30ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கலந்தாய்வை மேலும் தாமதப்படுத்தியது.
அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கலந்தாய்விற்கு பிறகும், காலியிடங்களை நிரப்புவதற்காக விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் காரணமாக, வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் நீட் முதுகளைத் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.