சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாக கூறி, இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதுகுறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில், அரசு அலுவலர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, ஆக்கிரமித்தாகக் கூறப்படும் கட்டடங்கள் விதிகளின்படியும், அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அனுமதி வழங்க கூடாது.
குறிப்பாக, விதிமீறல் வழக்கில் கட்டடங்களுக்கு சீல் வைத்தப்பின், அதுதொடர்பான மேல் முறையீடு உத்தரவுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பின்பற்றுவதில்லை.