தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவாகரத்து தம்பதிகள் விருந்தினர்களாகப் பழக வேண்டும் - உயர் நீதிமன்றம் - Husband and wife relationship be like a guest

தங்களை கணவன் - மனைவியாக கருதாமல், விருந்தினர்களாகப் பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தையின் நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும் எனப் பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விவகாரத்து தம்பதிகள் விருந்தினர்களாக பழக வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்
விவகாரத்து தம்பதிகள் விருந்தினர்களாக பழக வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 22, 2022, 10:21 AM IST

சென்னை:விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் - மனைவிக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையைப்பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.

தனிபட்ட இருவரின் புனிதமான சங்கமம் தான் திருமணம் என்றும், அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் இருவரின் கடமை எனவும் குறிப்பிட்ட நீதிபதி, பிரிவு என்கிற துரதிர்ஷ்டத்தால் கணவன், மனைவிக்குப் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், குழந்தைகள் அதன் பாதிப்பை உணர்வதுடன், மன வலியை அனுபவிப்பதாக கவலைத் தெரிவித்துள்ளார்.

பிரிந்த தம்பதியர், பரஸ்பரம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், குழந்தைகள் முன் மனிதநேயத்துடனும் நடந்துகொள்வது அவசியம் என வலியுறுத்தி உள்ளார். கணவன், மனைவி பிரிந்தாலும், இருவரையும் அணுகவும், அன்பு மற்றும் பாசத்தைப் பெறவும் குழந்தைகளுக்கு உரிமை உள்ளதாகச்சுட்டிக்காட்டிய நீதிபதி, சகத்துணையை புறக்கணிக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் குழந்தைகளும், தங்களைப்பார்க்க வரும் பெற்றோரை அலட்சியமாக நினைக்கத்தூண்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும், இது குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் செயல் எனவும் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும், தங்கள் பெற்றோரிடம் இருந்து மிரட்டல் இல்லாத, அன்பான உறவைப்பெற உரிமை உள்ளதாகக் கூறிய நீதிபதி, பெற்றோரில் ஒருவர் இந்த உரிமையை மறுப்பது கூட குழந்தைகளைத் தவறாக நடத்துவது தான் எனவும் கூறியுள்ளார்.

வெறுப்பு என்பது இயற்கையான உணர்வல்ல, அது கற்பிக்கப்படுகிறது என்றும், வெறுப்பையும், அச்சத்தையும் ஒரு குழந்தைக்கு கற்பிக்கும்போது, அது குழந்தையின் மனநலத்துக்கு ஆபத்தாகிவிடும் எனவும் எச்சரித்த நீதிபதி, குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது குழந்தையின் நலனுக்கு முக்கியமானது என அறிவுறுத்தியுள்ளார்.

பிரிந்து வாழும் தம்பதியர், குழந்தையைப்பார்க்க உள்ள உரிமை குறித்து அக்குழந்தைக்கு விளக்கி, அவர்களுடன் நேரம் செலவிட செய்ய வேண்டும் எனவும்; பிரிந்துவாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாகக் கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனவும்; அதன் மூலம் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தைப் பெற்றோருடன் செலவிடும் நேரத்தை மகிழ்வானதாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தாலியைக் கழட்டுவது கணவனுக்கு வேதனையை உண்டாக்கும்- சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details