தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2022, 8:10 AM IST

ETV Bharat / city

சட்டவிரோத காவலில் தாக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தனியார் நிறுவன ஊழியரை சட்டவிரோதமாக காவல் துறையினர் காவலில் எடுத்து தாக்கியதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

human rights commission order to tamil nadu government
மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை: எர்ணாவூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் சகோதரர் அஜித்குமாருக்கும், எண்ணூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொய் வழக்குகள் பதிவு செய்ததால் அஜித்குமார், வீட்டை விட்டு திடீரென மாயமானார்.

அவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயனும், காவலர் சந்தானகிருஷ்ணனும் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும், தட்டிக்கேட்ட தன்னை சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சட்டவிரோத காவலில் எடுத்து தாக்கியதாகவும், அதில் தனது கண்ணில் படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறி எழிலரசன், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், புகார்தாரர் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட எழிலரசனுக்கு இரண்டு லட்சம் ரூபாயை இழப்பீடாக எட்டு வாரங்களில் வழங்க தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இத்தொகையில், ஒரு லட்சம் ரூபாயை சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோரிடம் வசூலிக்க உத்தரவிட்ட ஆணையம், இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ABOUT THE AUTHOR

...view details