சென்னை: .இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(செப்.27) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,பெரம்பலூர்,அரியலூர்,திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர்,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,விழுப்புரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.