தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆவடியில் கனமழை: மக்கள் அவதி

ஆவடி பகுதியில் 23 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ததால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

By

Published : Dec 31, 2021, 3:31 PM IST

Updated : Dec 31, 2021, 4:18 PM IST

heavy rainfall at avadi
ஆவடியில் கனமழை

சென்னை: இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமே அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நேற்று (டிசம்பர் 30) மதியம் முதல் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிக அளவில் பெய்தது.

அதி கனமழை

குறிப்பாக ஆவடி பகுதியில், நேற்று மட்டும் ஒரே நாளில் 23 செ.மீட்டர் அளவில் அதி கனமழை பெய்துள்ளது. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகள், தெருக்களில் நீர் ஆறாக ஓடுகிறது. ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீரானது தேங்கி இருக்கிறது. இந்த மழை நீரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆவடியில் மழைநீர் வெளியேற போதிய வழிவகை இல்லாத காரணத்தினால் கடந்த வடகிழக்குப் பருவமழை முதல் தற்போது வரை இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் வெளியேற்றும் பணி

ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் காலை முதல், நீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வுசெய்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஜேசிபி இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி இன்று விடுமுறை

Last Updated : Dec 31, 2021, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details