சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறு அறிகுறி இருந்தாலும் தனிமைப்படுத்தல்:
மருத்துவக் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரம் முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று எடுத்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வராத மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சிறு அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் மாணவர்கள் தாங்கள் நேரடி வகுப்பில் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்களால் அதிகரிக்கும் கரோனா:
கரோனா தொற்றை பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக ஏறக்குறைய இரண்டாயிரம் என்ற அளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.
சென்னை, அதைச் சுற்றியுள்ள இடங்களில் மதம் சார்பான கூட்டங்கள் நடைபெறும்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து சவாலை ஏற்படுத்துகிறது. அதேபோல் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொற்று பரவியதுபோல் இங்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
500 குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஒருவருக்கு நோய் தொற்று வந்து அவர்கள் விளையாட்டு பகுதிக்கு வருவதால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் நிலை உள்ளது. அதனையும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணி செய்யும் இடங்களில் உள்ளவர்கள் மூலமும் நோய்த் தொற்று பரவி வீட்டில் உள்ளவர்களுக்கும் கரோனா வருகிறது.
சராசரி எண்ணிக்கையை விட குறையும் கரோனா: