தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் சுமார் ரூ. 1600 கோடி மதிப்பில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளுக்குத் தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

கோவை அவினாசி சாலையில் சுமார் 1600 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு
கோவை அவினாசி சாலையில் சுமார் 1600 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு

By

Published : Mar 17, 2021, 2:51 PM IST

Updated : Mar 17, 2021, 3:28 PM IST

14:42 March 17

சென்னை: கோவை அவினாசி சாலையில் சுமார் ரூ. 1600 கோடி மதிப்புள்ள மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை, அவினாசி சாலையில், கோல்ட்வின்ஸ் எனும் இடத்திலிருந்து உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை எதிர்த்து சசி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த அவினாசி சாலையில், எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்குச் சொந்தமான நிலத்தை, கையகப்படுத்துவது தொடர்பாக தனக்கு எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை என்றும், சமூக தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பதால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மேம்பால கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நீதிபதி நக்கீரன் அடங்கிய அமர்வு, உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட உள்ள மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க...: வேட்பாளர் மாற்றம் முதல் அறிக்கை குற்றச்சாட்டு வரை!

Last Updated : Mar 17, 2021, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details