தமிழ்நாடு

tamil nadu

கணவர் இறந்த சோகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி!

சென்னையில் கணவர் இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

By

Published : Aug 27, 2021, 7:30 PM IST

Published : Aug 27, 2021, 7:30 PM IST

மூதாட்டி மீட்பு
மூதாட்டி மீட்பு

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி நகர், துரைராஜ் தெருவில் வசித்து வந்தவர் மணிவாசகம் (75). இவரது மனைவி ரஞ்சிதம் (70). இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

மணிவாசகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது மனைவி ரஞ்சிதம், தன் கணவர் இறந்த சோகத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்த ரஞ்சிதம், இன்று (ஆக.27) காலை வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

மூதாட்டி மீட்பு

அப்போது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ரஞ்சிதத்தை மீட்கப் போராடினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி ரஞ்சிதத்தை மீட்டனர்.

மூதாட்டி மீட்பு

தொடர்ந்து சிறு காயங்களுடன் இருந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இணைபிரியாத தம்பதி: ஒரேநாளில் கணவன், மனைவி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details