சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபஸ்ரீ என்பவர், கடந்த வியாழக்கிழமையன்று பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மேல் விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், குரோம்பேட்டை பவானி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுபஸ்ரீயின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.