தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மொத்தம் 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.