தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2022, 9:51 PM IST

ETV Bharat / city

ஆன்லைன் ரம்மியை தடை செய்து அவசர சட்டத்தை அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து அரசிதழ்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து அரசிதழ்

சென்னை: தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசிதழில், செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாவது, 'சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இருப்பார்கள்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்குத் தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் / நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள்/ நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்து அவசர சட்டத்தை அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ரம்மி, போக்கர் என்ற இரு சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வரும் 17ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை... அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை யாருக்கு?; பதில்கூறிய சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details