இதுகுறித்து தமிழ்நாடு அரசு, "புயல் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.74 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இப்பணத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், பொதுப்பணி, வேளாண்மை, நெடுஞ்சாலை, மின்வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கும் பயன்படுத்த விடுவிக்கப்பட்டுள்ளது.