இதுதொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், “ தமிழ்நாடு அரசின் நிரந்தர பெண் பணியாளர்களுக்கு, 270 நாட்கள் அதாவது ஒன்பது மாதங்கள் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும். அந்த சலுகை தற்போது அரசின் அவசர காலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக பெண் பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 9 மாத பேறுகால விடுப்பு - அரசாணை வெளியீடு! - அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும்
சென்னை: அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
![அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 9 மாத பேறுகால விடுப்பு - அரசாணை வெளியீடு! assembly](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8338584-548-8338584-1596859119641.jpg)
assembly
அதன்படி, குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கு, முழு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பாக ஒன்பது மாதங்கள் வழங்கப்படும். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண் ஊழியர்களுக்கே இச்சலுகை பொருந்தும் “ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’மருத்துவர்கள், மருத்துவமனை குறித்து தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது’