சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (அக்.16) துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அங்கு, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த ஐந்து பேரை பிடித்த அலுவலர்கள், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் ஐந்து பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களைது உடமைகளை சோதனை செய்தனர்.
சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
ஆனால், அதில் எதுவும் இல்லாததால் அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை சோதித்தனர். அப்போது உள்ளடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட 343 கிராம் தங்கம் பறிமுதல்