தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி... இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்... - நகைக்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

gold loan waiver
gold loan waiver

By

Published : Nov 1, 2021, 6:00 PM IST

சென்னை:திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்.13ஆம் தேதி சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார்.

அத்துடன் “நகைக் கடன் தள்ளுபடி தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செய்யப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளருக்கு மட்டும் இந்த தள்ளுபடி பொருந்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது" என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து கடன் பெற்றவர்களின் விவரங்களை அரசு சேகரித்துவந்தது. இந்த நிலையில், ரூ.6,000 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடனுக்கான அசல், வட்டியை அரசு ஏற்கிறது. இதனால் அரசுக்கு ரூ.6,000 கோடி செலவாகும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவர். குறிப்பாக 2021மார்ச் 31ஆம் தேதிவரை வழங்கப்பட்ட நகைக்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details