சென்னை: தியாகராஜ நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஜி சம்பத், பாஜக தேசியச் செயலாளர் சி.டி. ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி. ரவி, "தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாஜகவில் சேர வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். கள நிலவரம் திமுகவிற்குச் சாதகமாக இல்லை.
2016ஆம் ஆண்டிலும் பல ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டன, திமுக அதிமுகவை வெல்லும் என்றும் கூறின. அதையெல்லாம் மீறி மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடித்தது. இம்முறையும் அதிமுகதான் வெற்றிபெறும். திமுகவில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் உள்ளன. இது அவர்களுக்கு வெற்றியைத் தராது" என்றார்.